பெங்களூரில் நவ.25-இல் ஜாதக பரிவர்த்தனை கூட்டம்

பெங்களூரில் நவ. 25-ஆம் தேதி ஜாதக பரிவர்த்தனை கூட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து வணிக வைசிய சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் நவ. 25-ஆம் தேதி ஜாதக பரிவர்த்தனை கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து வணிக வைசிய சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வணிக வைசிய சங்கத்தின் சார்பில், பெங்களூரு, லட்சுமிபுரம், சி.எம்.எச்.சாலையில் உள்ள ஸ்ரீசிவானுபவ திருமண மண்டபத்தில் நவ. 25-ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் வாணிய செட்டியார் சமுதாயத்தினருக்கான 47-ஆவது ஜாதக பரிவர்த்தனை கூட்டம் நடைபெறுகிறது.
சங்கத் தலைவர் பி.லட்சுமணன் தலைமையில், சங்கச் செயலர் வி.ஜி.சங்கர் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தை, சங்க துணைத் தலைவர் டி.ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் ஆறுமுகம், மோகன், உதவி செயலர் அண்ணாதுரை, பாபு, ராஜரத்தினம், தனபால், சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் வரன்களின் ஜாதகம், குடும்ப விவரம், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க  இணையதளத்தில் பதிவிடலாம். மேலும் விவரங்களுக்கு 080-25300277, 9902806478 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com