விநாயகர் ஊர்வலத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவாஜி நகர், பாரதி நகர் காவல் சரகங்களில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தையொட்டி மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு சிவாஜி நகர், பாரதி நகர் உள்ளிட்ட காவல் சரகங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) கூட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சிவாஜி நகர், வீரப்பபிள்ளை சாலை, தர்மராஜா கோயில் சாலை, குவார்டன்ட் சதுக்கம், ஷேப்பிங்ஸ் சாலை, திம்மைய்யா சாலை, காமராஜ் சாலை, சிவன்செட்டி கார்டன், செயின்ட்ஜான்ஸ் சதுக்கம், ஏ.எஸ்.எம். சாலை, அல்சூர் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி பாரதி நகர், சிவாஜி நகர் காவல் சரகங்களில் காலை 6 மணி முதல் இரவு 11.30 வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.