விதிகளை மீறி சமையல் எரிவாயுவை நிரப்பி விற்பனை செய்த ஒருவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 131 சமையல் எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு பைப்பனஹள்ளி கக்கதாசபுராவைச் சேர்ந்தவர் உமேதுராம் (24). இவர் கக்கதாசபுரா பிரதான சாலையில் சட்டவிதிகளை மீறி சமையல் எரிவாயுவை நிரப்பி, விற்பனை செய்து வந்தாராம். தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று உமேதுராமைக் கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 2.30 லட்சம் மதிப்புள்ள 131 சமையல் எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பைப்பனஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.