வெகுவிரைவில் பெங்களூரில் நடக்கவிருக்கும் சிற்பக் கலை கண்காட்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள சிற்பிகளிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கர்நாடக சிற்பக் கலை அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கர்நாடக சிற்பக் கலை அகாதெமி சார்பில் ஆண்டுதோறும் மரபு மற்றும் தற்கால சிற்பக்கலை கண்காட்சியை நடத்திவருகிறது. இந்தக் கண்காட்சியில் சிற்பிகளின் சிற்பக் கலைகள் காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கம்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் சிற்பங்களை காட்சிப்படுத்த விரும்பும் சிற்பிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கண்காட்சியில் இடம்பெறக் கூடிய சிற்பம், உலோகம், மரம், கல், கலவைகளான 2 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். கண்காட்சியில் பங்கேற்கும் சிறந்த 6 சிற்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
இக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் சிற்பி கர்நாடகத்தை சேர்ந்தவராகவோ, 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் குடியேறியவராகவோ, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
சிற்பங்கள் குறித்த விவரங்களுடன் விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் பெங்களூரு, ஜே.சி.சாலை, கன்னட மாளிகையில் அமைந்துள்ள அகாதெமியின் அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும். நுழைவுக் கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படும். விண்ணப்பப் படிவங்களை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22278725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.