மங்களூரில் செப். 21-இல் வட்டார மொழி திரைப்பட திருவிழா தொடக்கம்

மங்களூரில் செப். 21-ஆம் தேதி முதல் செப். 23-ஆம் தேதி வரை வட்டார மொழிகளின் திரைப்பட திருவிழா நடைபெற உள்ளது.


மங்களூரில் செப். 21-ஆம் தேதி முதல் செப். 23-ஆம் தேதி வரை வட்டார மொழிகளின் திரைப்பட திருவிழா நடைபெற உள்ளது.
பெங்களூரில் சனிக்கிழமை கன்னட திரைப்பட அகாதெமியின் தலைவர் நாகதிஹள்ளி சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடக மாநிலம் மங்களூரு சந்த ஏலோஷிஷ் கல்லூரி வளாகத்தில் செப். 21-ஆம் தேதி முதல் செப். 23-ஆம் தேதி வரை வட்டார மொழிகளின் திரைப்பட திருவிழா நடைபெற உள்ளது.
திருவிழாவில் துளு, கொடுவா, கொங்கணி, பஞ்சாரா, பியாரி உள்ளிட்ட வட்டார மொழிகளுடன் கன்னடம் உள்ளிட்ட 9 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் திரையிடும் போது அதன் இயக்குநர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட விழாவை தென் கன்னட மாவட்ட பொறுப்பு அமைச்சர் யு.டி.காதர் தொடங்கி வைக்க உள்ளார். விழாவில் இயக்குநர் குருஷாப் ஷெட்டி, நடிகர் சிவதுவஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com