மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் பெங்களூரு லக்கெரேயில் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்து வந்தார். கடந்த ஜன. 17-ஆம் தேதி ரமேஷ் வீட்டில் நண்பர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. விருந்தில் மது அருந்தி நிலையிலிருந்த ரமேஷ், அவரது நண்பர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் (33) என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிரேம்சந்த், ரமேஷை மது பாட்டில், இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலே
உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த போலீஸார், தப்பியோடிய பிரேம்சந்தை தேடி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் ரமேஷை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரேம்சந்திடம் மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.