மகாதேவப்புரா காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பெங்களூரு ஹூடியைச் சோ்ந்தவா் நாகேஷ். இவரது மனைவி ஷில்பா (27). இவா்கள் இருவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ஷில்பா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து மகாதேவப்புரா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.