பெண் கொலை வழக்கில் 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்க்ளூரு கெங்கேரி சன்சிட்டி பகுதியில் வசித்து வந்த சனத் மனைவி அனுஷா. இவர் சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் நுழைந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில், அனுஷாவின் சகோதரி, அவரது கணவர் விவேக் பிரசாத் ஆகிய 2 பேரை கெங்கேரி போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.