அரசியல் சிக்கல்களை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீர்ப்பார்கள் என்று கர்நாடக மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
இதுகுறித்து ஹாசனில் அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசுகு ஏதாவது சிக்கல் உருவானால், அதை கூட்டணிக் கட்சிகளின் மூத்தத்தலைவர்கள் தீர்த்துவைப்பார்கள்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த சிங்கின் ராஜிநாமா குறித்து எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ரேவண்ணா.