கர்நாடகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு 4-ஆவது சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் அரசு அலுவலகங்களுக்கு மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, மாதந்தோறும் 4-ஆவது சனிக்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக, சாதாரணமாக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு வழங்கப்பட்டிருந்த 15 நாட்கள் விடுமுறை, 10 நாட்களாக குறைக்கப்படுகிறது. இந்த உத்தரவு ஜூன் மாதத்தில் இருந்து அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.