பெங்களூரு
சாலை விபத்தில் இளைஞர் பலி
சாலை தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சாலை தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் (22). இவர் தனது நண்பர் தீபக்குடன், திங்கள்கிழமை இரவு 11.15 மணியளவில் மோட்டார்சைக்கிளில் பேடரஹள்ளியிலிருந்து சுங்கதகட்டேவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். காயமடைந்த தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காமாட்சிப்பாளையா போக்குவரத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.