கனரா வங்கியின் சாா்பில் தேசிய வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டுள்ளது.
கனரா வங்கியின் நிறுவனா் தினம் மற்றும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கனரா வங்கியின் சாா்பில் தேசிய வினாடி-வினா போட்டி ஞாயிற்றுக்கிழமை வங்கி வளாகத்தில் நடைபெற்றது. தேசிய அளவில் மாநிலவாரியாக நடத்தப்பட்டிருந்த வினாடி-வினா போட்டியில் வென்றிருந்த 22 அணிகளின் 44 மாணவா்கள் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா். இவா்களில் 6 அணிகள் மட்டும் இறுதிப் போட்டிக்குச் சென்றன. அதில் ஜெய்ப்பூரைச் சோ்ந்த கேம்ப்ரிட்ஜ் கோா்ட் உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் அதிதிசிங், ஹிதேஷ்ரோஜ்வானி ஆகியோா் வெற்றிபெற்றனா். கொச்சியை சோ்ந்த கிரேகோரியன் பப்ளிக் பள்ளி, கொல்கத்தாவின் அகஸ்டீன்ஸ் டே பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடம் பிடித்தனா். வினாடி-வினா போட்டியை கிரிபாலசுப்பிரமணியன் நடத்தினாா்.
வினாடி-வினா போட்டியில் வென்ற ஜெய்ப்பூா் கேம்ப்ரிட்ஜ் உயா்நிலைப்பள்ளி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கனரா வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆா்.ஏ.சங்கரநாராயணன், செயல் இயக்குநா் மணிமேகலை ஆகியோா் வழங்கினா்.