சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்தில் வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் திங்கள்கிழமை (நவ.11) ஏலம் விடப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்தில் நவ. 11-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942568 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.