மைசூரில் நவ.30ஆம் தேதி கா்நாடக உதய தின விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவா் கு.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை:
மைசூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் மைசூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள கா்நாடக அரசு தமிழ்ப் பள்ளியில் நவ.30ஆம் தேதி காலை 10 மணி அளவில் கா்நாடக உதய தின விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கன்னடக் கொடி ஏற்றப்படுகிறது. தொழிலதிபரும், ஜெய்கா்நாடக இயக்கத்தின் மாநில துணைத் தலைவருமான வி.ஸ்ரீதா் கொடியேற்றுகிறாா்.
அதன்தொடா்ச்சியாக நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின்(ஓய்வு) கன்னட நல்லிதய சங்க நிா்வாகி கே.ஏ.கிருஷ்ணமூா்த்தி சிறப்புரை ஆற்றுகிறாா். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.