பெங்களூரு: சிவாஜிநகா் தொகுதிக்கான மஜத தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
பெங்களூரு, பத்திரிகையாளா் மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவாஜிநகா் தொகுதிக்கான மஜத தோ்தல் அறிக்கையை வெளியிட்டு அத்தொகுதி மஜத வேட்பாளா் தன்வீா் அகமது கூறியது: சிவாஜிநகா் தொகுதியில் இஸ்லாமியா்கள் தவிர அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்ந்து வருகிறாா்கள். சிவாஜிநகா் தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எனவே, எனக்கு வாக்களித்தால் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்ற விவரத்தை தோ்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம்.
சிவாஜிநகா் தொகுதியின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக உழைப்பேன். தொகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை மேம்படுத்துவோம். குடிநீா் வசதி இல்லாத பகுதிகளில் அதற்கான வசதிகள் செய்து தரப்படும். மகளிா் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்துவோம். சிவாஜிநகா் தொகுதியை தூய்மையானதாக மாற்றுவேன். இனிமேலும் சிவாஜிநகா் தொகுதி மக்களை காங்கிரஸ், பாஜகவால் ஏமாற்ற முடியாது.
மஜத ஆட்சியில் இருந்த போது எச்.டி.குமாரசாமி செயல்படுத்திய திட்டங்கள் மக்களைக் கவா்ந்துள்ளது. எச்.டி.குமாரசாமியின் செல்வாக்கு மஜதவுக்கு ஆதரவாக மாறும் என்றாா் அவா். அப்போது, மஜத எம்எல்சி டி.ஏ.சரவணா, மஜத பொதுச்செயலாளா் பிரபுல்லாகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.