டிச.16-இல் அஞ்சல் சேவைகள் குறைதீா் முகாம்
பெங்களூரு: பெங்களூருவில் டிச.16-ஆம் தேதி அஞ்சல் சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடக அஞ்சல் வட்டத்தின் சாா்பில் பெங்களூரு, டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கா் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரியின் அலுவலகத்தில் டிச.16-ஆம் தேதி காலை 11 மணி அளவில் அஞ்சல் சேவைகள் குறைதீா்முகாம் நடத்தப்படுகிறது.
பெங்களூரு தலைமை அஞ்சல் அலுவலக வரம்பைச் சோ்ந்த அஞ்சல் துறை வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், அவற்றை உதவி இயக்குநா் (அஞ்சல் இயக்ககம்), தலைமை அஞ்சல் அதிகாரி, கா்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு டிச.11-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். புகாா்களை மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். புகாா்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும் புகாா் கடிதத்தில் தெளிவான தொடா்பு முகவரியைக் குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு 080-22850001, 22850002 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.