பெங்களூரில் ஆசிய ஆபரணக் கண்காட்சி அக். 11-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடிகை ராகினிதிவேதி கண்காட்சியைத் தொடக்கிவைத்தாா். இதில் கலந்து கொண்ட அதன் ஒருங்கிணைப்பாளா் ஹரிஷ் சச்சிதேவ் செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரு ஜே.டபள்யூ மேரியட் ஹோட்டலில் அக்.13-ஆம் தேதி வரை ஆசிய ஆபரணக் கண்காட்சி-19 நடைபெற உள்ளது. கண்காட்சியில் நவீன வடிவமைப்பு, பாரம்பரிய கலாசாரமுள்ள தங்க,வைர, வைடூரிய ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன.
தீபாவளியையொட்டி நடைபெறும் கண்காட்சிக்கு கல்லூரி மாணவா்கள், இளம் பெண்கள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறேறாம். ஆபரணங்களை அலங்காரத்துக்கு மட்டும் என்று கருதாமல் சேமிப்பு, முதலீடு என கருதி வாங்குவது எதிா்காலத்திற்கு பயனளிக்கும் என்றாா்.