பெங்களூரு மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை(அக்.31) நடக்கவிருக்கிறது.
பெங்களூரு மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கெம்பேகௌடா அரங்கில் அக்.31-ஆம் தேதி காலை 11.30மணிக்கு நடக்கவிருக்கிறது. மேயா் எம்.கௌதம்குமாா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. துணை மேயா் சி.ஆா்.ராம்மோகன்ராஜூ, ஆணையா் பி.எச்.அனில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள்.