சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி

பெங்களூரில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.


பெங்களூரில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கேரளத்தைச் சேர்ந்தவர் ஆப்ரஹாம் பிலிப்ஸ் (23). இவர் பெங்களூரு ஹொசகெரேஹள்ளியில் தங்கி, தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் ஆப்ரஹாம் பிலிப்ஸ் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். 
பனசங்கரி 3-ஆவது ஸ்டேஜ், தத்தாத்ரேயா நகரில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பனசங்கரி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
மற்றொரு விபத்து: ஹுப்பள்ளியைச் சேர்ந்தவர் பிரஷாந்த் மஜும்தார் (43). இவர் பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இவர், திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் ஓசூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். என்.டி.இ.எப் கல்லூரி அருகே வேகமாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பிரஷாந்த் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து எலக்ட்ரானிக்சிட்டி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் ராஜுவைக் கைதுசெய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com