இலங்கை குண்டு வெடிப்பில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் பலி

 இலங்கை குண்டு வெடிப்பில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 இலங்கை குண்டு வெடிப்பில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 290-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் கர்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம்,  மங்களூரு அருகே உள்ள சூரத்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரஸினாகாதர் குக்கடி, நெலமங்களா, தும்கூரைச் சேர்ந்த மஜத பிரமுகர்கள் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா, கே.எம்.லட்சுமிநாராயணா, லக்ஷ்மண் கெளடா ரமேஷ், சிவண்ணா, மாரே கெளடா ஆகியோர் பலியாகியுள்ளதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. 
இந்த நிலையில்,  காணாமல் போன மஜத பிரமுகர் புட்டராஜு (37) என்பவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. இதன்மூலம் கர்நாடகத்திலிருந்து இலங்கைக்குச் சென்ற 8 பேர் குண்டுவெடிப்பில் இறந்துள்ளனர்.  இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com