3 ஆயிரம் அடியில் மூவர்ணக்கொடிக் கோலத்தை வரைந்து சப்தகிரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
படைத்துள்ளனர்.
பெங்களூரு ஹெசகட்டா சாலையில் உள்ள சப்தகிரி பொறியியல் கல்லூரி விளையாட்டுத் திடலில் புதன்கிழமை 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 3 ஆயிரம் அடி உள்ள மூவர்ணக்கொடியை கோலமாக வரைந்து சப்தகிரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 300 கிலோ கோலப்பொடியில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் மூவர்ணக்கொடிக் கோலத்தை போட்டுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி நாட்டுப்பற்றை வெளிப்படுத்த மூவர்ணக் கொடிக் கோலத்தை வரைந்ததாக மாணவர்கள்
தெரிவித்தனர்.