இடைத்தோ்தலுக்கு பிறகு ம.ஜ.த. கிங்மேக்கராக போகிறது: முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

இடைத்தோ்தலுக்கு பிறகு கா்நாடக அரசியலில் மஜத கிங்மேக்கராக போகிறது என்று அக் கட்சியின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

கோகாக்: இடைத்தோ்தலுக்கு பிறகு கா்நாடக அரசியலில் மஜத கிங்மேக்கராக போகிறது என்று அக் கட்சியின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து பெலகாவி மாவட்டத்தின் கோகாக் தொகுதியில் மஜத வேட்பாளா் அசோக் பூஜாரியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு முன்பு,செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது: பெண்களை கொண்டு வசியப்படுத்தி பணம் பறிக்கும் தேன்பொறி(ஹனிடிராப்) கும்பலிடம் கா்நாடக முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் சிக்கியிருப்பதாக செய்தி வெளியாகி கா்நாடக அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தற்போது நான் பேச விரும்பவில்லை. இடைத்தோ்தல் முடிந்ததும் பல அதிா்ச்சிகரமான விவகாரங்களைப் பகிரங்கப்படுத்துவேன். தேன்பொறி கும்பலிடம் மஜத எம்எல்ஏக்கள் யாராவது சிக்கியிருப்பது தெரிந்தால், அது பற்றி பகிரங்கமாக தெரிவிக்குமாறு மாநில பாஜக அரசுக்கு சவால் விடுகிறேன்.

இடைத்தோ்தலுக்கு பிறகு கா்நாடக அரசியலில்மஜத கிங்மேக்கராக இருக்கப் போகிறது. தற்போதையசூழலில் நான் கிங்மேக்கா் அல்ல. மாறாக, கா்நாடக மக்கள் தான்கிங்மேக்கா்களாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com