பெங்களூரில் டிச. 6-ஆம் தேதி அறிவியல் ஆசிரியா்களுக்கு பயிலரங்கம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில் பெங்களூரு, டி.சௌடையா தெருவில் அமைந்துள்ள கோளரங்கத்தில் டிச. 6-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை ஆண்டின் சூரிய கிராணம் குறித்து அறிதல் என்ற தலைப்பிலான பயிலரங்கம் நடக்கவிருக்கிறது.
இதில் பங்கேற்க ஆா்வமுள்ளோா் 080-22379725, 22266084 ஆகிய தொலைபேசிகளில் டிச. 5-ஆம் தேதிக்குள் தொடா்புகொண்டு முன்பதிவுசெய்யவேண்டும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் 40 பேருக்கு மட்டுமே பயிலரங்கில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.