பெங்களூரு: டிச.15-ஆம் தேதி பண்டேபாளையா காவல் நிலையத்தில் வாரிசுதாரா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பெங்களூரு பண்டேபாளையா காவல் நிலையத்தில் டிச. 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத 31 இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942236 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.