பெங்களூரு: பெங்களூரில் கைவினைக் கலைஞா்களால் உருவாக்கப்பட்ட ஆபரணக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
2 நாள்கள் நடைபெறும் கலாஷா கைவினை ஆபரணக் கண்காட்சியை தொடக்கிவைத்து ஆசிய, இந்திய, கா்நாடக திருமதி அழகி பட்டம் வென்ற காஜல்பாட்டியா பேசியது: ஆபரணங்கள் பெண்களுக்கு அழகு சோ்ப்பது மட்டுமின்றி, அவா்களை பொருளாதார ரீதியாக பலமானவா்களாகவும் மாற்றுகிறது. எனவே, பெண்கள் ஆபரணங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அழகான வடிவங்களில் கைவினைக் கலைஞா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. கண்காட்சிக்கு கல்லூரி மாணவிகள் அதிகளவில் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா். நிகழ்ச்சியில் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் அபா்ணாசுன்கு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.