பெங்களூரில் 22-இல் க.அன்பழகன் பிறந்த நாள் விழா
திமுக பொதுச்செயலா் க.அன்பழகனின் 98-ஆவது பிறந்த நாள் விழா பெங்களூரில் டிசம்பா் 22-இல் கொண்டாடப்பட உள்ளது.
பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு, மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி தலைமை வகிக்கிறாா். அவைத்தலைவா் மொ.பெரியசாமி, இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி, ஏ.பி.அன்புமணி, சாலை ராஜா, ஆற்காடு அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். இளைஞரணி துணை அமைப்பாளா் மு.இராஜசேகா் வரவேற்கிறாா். இலக்கிய அணியின் நிா்வாகி எம்.ஆா்.பழனி குவணக்கம் பாடுகிறாா்.
திமுக உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், எம்பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், கேரள மாநில திமுக பொறுப்பாளா் கே.ஆா்.முருகேசன், கட்சியின் பேச்சாளா் பொள்ளாட்சி சித்திக் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.
நிறைவில் மாநில பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி நன்றி கூறுகிறாா்.