நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்க்ளூரு சந்திராலேஅவுட் என்.ஜி.இ.எப் லேஅவுட் முதலாவது சாலையை சேர்ந்தவர் வசந்தா. இவர் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வசந்தா அணிந்திருந்த ரூ. 1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து சந்திராலேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.