பெங்களூரில் உள்ள ஜவாகர்லால் நேரு கோளரங்கத்தில் பிப். 28-ஆம் தேதி அறிவியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஜவாகர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகர்லால் நேரு கோளரங்கத்தில் பிப். 28-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை அறிவியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.
"காகிதங்கள் வழியே வானியல்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிலரங்கத்தில், கணிதம் மற்றும் அறிவியலில் அதீத ஈடுபாடுள்ள 8-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பயிலரங்கில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.taralaya.org என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம்.