சிறு, குறு, நிறுவனங்களின் பொருள் மற்றும் சேவை வரி உச்ச வரம்பை உயர்த்தியதற்கு கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் சுதாகர் ஷெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்வது சிறு,குறு நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கான பொருள் மற்றும் சேவை வரி உச்சவரம்பை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாகவும், ஆண்டு விற்றுமுதலை ரூ. 1 கோடியிலிருந்து 1.5 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு அபரீதமாக உள்ளது என அதில் அவர் தெரிவித்துள்ளார்.