பெங்களூரு நகர வடக்கு மூன்றாம் துணை மண்டலத்தில் வியாழக்கிழமை (ஜன.17) குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு மூன்றாம் துணைமண்டலத்தில் சஹகாரநகர், ஜக்கூர், வித்ராண்யபுரா மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர் குறைதீர் முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 23621888.