சிவக்குமார சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றை சர்வதேச அளவில் அனைவரும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
தும்கூரு சித்தகங்கா மடத்தில் செவ்வாய்க்கிழமை சிவக்குமார சுவாமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நடமாடிய தெய்வம் சிவக்குமார சுவாமிகளின் வரலாற்றை சர்வதேச அளவில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கொண்டு செல்ல மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.