அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு, பெங்களூரில் ஜன. 30-ஆம் தேதி (புதன்கிழமை) இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கர்நாடகத்தில் ஜன. 30-ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, விலங்குகள் வதை தடைச்சட்டத்தின் கீழ் பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஜன. 30-ஆம் தேதி விலங்குகளை துன்புறுத்தவும், அதன் இறைச்சியை விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இறைச்சியை விற்க விதித்துள்ள தடையை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.