சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: கிராமப் பஞ்சாயத்து ஊழியர் உள்பட 3 பேர் கைது

தென் கன்னட மாவட்டம் விட்லாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பஞ்சாயத்து ஊழியர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தென் கன்னட மாவட்டம் விட்லாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பஞ்சாயத்து ஊழியர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தென்கன்னட மாவட்டம், விட்லாவைச் சேர்ந்த சிறுமியை கிராமப் பஞ்சாயத்து ஊழியர் கிருஷ்ணாநாயக், ஆட்டோ ஓட்டுநர் தனூஷ், கணேஷ், பவன் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில் விட்லா போலீஸார் 
கிருஷ்ணாநாயக், தனூஷ், கணேஷ் ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.  
பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலி
பெங்களூரு, ஜூலை 10: மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
பெங்களூரு பாப்பிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணரெட்டி (39). குடிநீர் கேன் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பீன்யா மேம்பாலத்தில் வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணரெட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பீன்யா போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com