பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

காலியாக உள்ள பட்டயப் படிப்புகளுக்கான (டிப்ளமோ) இடங்களில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியாக உள்ள பட்டயப் படிப்புகளுக்கான (டிப்ளமோ) இடங்களில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019-20-ஆம் கல்வியாண்டில் பெங்களூரில் செயல்பட்டுவரும் எஸ்.ஜே.அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பட்டயப் 
படிப்புகளுக்கான இடங்களில் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி அடைந்து அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் கையேட்டை h‌t‌t‌p://‌d‌t‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பாடப்பிரிவுகள், விண்ணப்பக் கட்டணம், தகுதி சான்றிதழ்கள் குறித்த விவரங்களையும் இந்த இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 
விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 3 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் ஜூலை 15 முதல் 19-ஆம் தேதிக்குள் கல்லூரியில் நேரில் செலுத்தலாம். விண்ணப்பத்துடன் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ரூ.50, பொதுப்பிரிவினர் ரூ.100 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com