பெங்களூரில் ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-2 செயற்கைக்கோள் குறித்த உரைவீச்சு நடக்கவிருக்கிறது.
இது குறித்து ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூலை 15-ஆம் தேதி சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவுக்கு இரண்டாவது பயணமாக விண்ணை நோக்கிச் செல்லவிருக்கிறது. இதை முன்னிட்டு ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் உள்ள கோளரங்கத்தில் மாதாந்திர அறிவியல் சங்கக் கூட்டத்தில் ஜூலை 14-ஆம் தேதி மாலை 3 மணிக்கு சந்திரயான்-2 இந்தியநிலவுப் பயணம் குறித்த உரைவீச்சு நடக்கவிருக்கிறது. ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவியல் ஆர்வலர்கள், ஆசிரியர்களுக்கு நிலவு குறித்த செயல்விளக்கங்களை அளிப்பதற்கான பயிலரங்கம் நடக்கவிருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.