லஞ்சம்: மூத்த தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள் கைது

 லஞ்சம் வாங்கியதாக மூத்த தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 லஞ்சம் வாங்கியதாக மூத்த தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு பன்னரகட்டா சாலையில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் லட்ச ஒழிப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அந்த அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையில் போது, லஞ்சம் வாங்கியதாக மூத்த தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள் என்.வி.கோவிந்தராஜுலு,  வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து ரூ. 13.09 லட்சம் ரொக்கப் பணம், மடிக்கணினி, 4 செல்லிடப்பேசிகள், 2 கார்கள், 3 அச்சு இயந்திரங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com