கோலார் தங்கவயல் பி.இ.எம்.எல் தொழிற்சாலையின் எஸ்.சி., எஸ்.டி. நல்வாழ்வு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.
கோலார் தங்கவயல் பி.இ.எம்.எல் தொழிற்சாலையின் எஸ்.சி.,எஸ்.டி நல்வாழ்வு சங்கத்தின் தேர்தல் கடந்த மே 31-ஆம் தேதியன்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் தலைவராக எஸ்.திருநாவுக்கரசன், துணைத் தலைவர்களாக, எம்.நாமதேவன், சி.செளந்தரராஜன், பொது செயலராக நாரயணமூர்த்தி, இணைச் செயலாளராக நாராயணா, துணை செயலாளராக ஜெயகாந்தன், பொருளாளராக ரமேஷ் பாபு உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அனைவரும் புதன்கிழமை சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.