சிறந்த நூல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்முறையாக வெளியிட்டுள்ள நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

முதல்முறையாக வெளியிட்டுள்ள நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து கர்நாடக இலக்கிய அகாதெமி(கர்நாடக சாஹித்ய அகாதெமி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறந்தநூல்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கர்நாடக இலக்கியப் பேரவையானது பரிசுகளை வழங்கி வருகிறது. 
2018-ஆம் ஆண்டுக்கான சிறந்தநூல்களைத் தேர்ந்தெடுக்க  உரியவர்களிடம் (எழுத்தாளர்கள்,  பதிப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தேர்வுக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டிருக்கவேண்டும். விண்ணப்பத்துடன் 4 நூல்களை பதிவாளர், கர்நாடக இலக்கிய அகாதெமி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது தனியார் அஞ்சல் வழியே ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு  w‌w‌w.‌k​a‌r‌n​a‌t​a‌k​a‌s​a‌h‌i‌t‌y​a​a​c​a‌d‌e‌m‌y.‌o‌r‌g என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com