முதல்முறையாக வெளியிட்டுள்ள நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து கர்நாடக இலக்கிய அகாதெமி(கர்நாடக சாஹித்ய அகாதெமி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறந்தநூல்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கர்நாடக இலக்கியப் பேரவையானது பரிசுகளை வழங்கி வருகிறது.
2018-ஆம் ஆண்டுக்கான சிறந்தநூல்களைத் தேர்ந்தெடுக்க உரியவர்களிடம் (எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வுக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டிருக்கவேண்டும். விண்ணப்பத்துடன் 4 நூல்களை பதிவாளர், கர்நாடக இலக்கிய அகாதெமி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது தனியார் அஞ்சல் வழியே ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.karnatakasahityaacademy.org என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.