ரெளடி பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ஞானபாரதியைச் சேர்ந்தவர் லட்சுமண் (40). காமாட்சிப்பாளையா, ஞானபாரதி ஆகிய காவல் நிலையங்களில் ரெளடிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் மகாலட்சுமி லேஅவுட் ஆர்.ஜி.சாலையில் காரில் வந்த லட்சுமணை, மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.