ரெளடி வெட்டிக் கொலை

ரெளடி பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ரெளடி பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ஞானபாரதியைச் சேர்ந்தவர் லட்சுமண் (40). காமாட்சிப்பாளையா, ஞானபாரதி ஆகிய காவல் நிலையங்களில் ரெளடிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் மகாலட்சுமி லேஅவுட் ஆர்.ஜி.சாலையில் காரில் வந்த லட்சுமணை, மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com