மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவகைலாஷ்ரெட்டி. இவர் பெங்களூரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்கு கருடாச்சார் பாளையத்தில் சாலை நடைபாதையில் நடந்து சென்ற அவர் மீது கால்நடைப் பராமரிப்பு அறக்கட்டளைக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவகைலாஷ்ரெட்டி நிகழ்விடத்திலே உயிரிழந்தார். சம்பவ இடத்தை புதன்கிழமை மேயர் கங்காம்பிகே பார்வையிட்டார். சுவர் இடிந்து விழுந்த கால்நடைப் பராமரிப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.