பராமரிப்பு பணி: ரயில் சேவைகள் ரத்து

இருப்புப்பாதை பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்புப்பாதை பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு மண்டலத்தில் சாவனூர்-யல்விகி-குட்கேரி தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்புப் பணி நடைபெற்றுவருவதால், இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவை பகுதி அளவுக்கு மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் எண்-56273/56274-அரசிகெரே-ஹுப்பள்ளி-அரசிகெரே பயணிகள் ரயில் மே 1 முதல் 10-ஆம் தேதிவரை தினமும் ஹரிஹர்-ஹுப்பள்ளி-ஹரிஹர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்துசெய்யப்படுகிறது. அதேபோல, ரயில் எண்-56913/56913-பெங்களூரு-ஹுப்பள்ளி-பெங்களூரு பயணிகள் ரயில் மே 1 முதல் 10-ஆம் தேதிவரை தினமும் சிக்ஜாஜூர்-ஹுப்பள்ளி-சிக்ஜாஜூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com