பராமரிப்பு பணி: ரயில் சேவைகள் ரத்து
இருப்புப்பாதை பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு மண்டலத்தில் சாவனூர்-யல்விகி-குட்கேரி தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்புப் பணி நடைபெற்றுவருவதால், இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவை பகுதி அளவுக்கு மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் எண்-56273/56274-அரசிகெரே-ஹுப்பள்ளி-அரசிகெரே பயணிகள் ரயில் மே 1 முதல் 10-ஆம் தேதிவரை தினமும் ஹரிஹர்-ஹுப்பள்ளி-ஹரிஹர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்துசெய்யப்படுகிறது. அதேபோல, ரயில் எண்-56913/56913-பெங்களூரு-ஹுப்பள்ளி-பெங்களூரு பயணிகள் ரயில் மே 1 முதல் 10-ஆம் தேதிவரை தினமும் சிக்ஜாஜூர்-ஹுப்பள்ளி-சிக்ஜாஜூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.