ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
பெங்களூரு ஊரகப் பகுதியான தொட்டப்பாள்ளாபூர் கச்சேரிபாளையாவைச் சேர்ந்தவர் விஜய் (20).  சாந்தி நகரைச் சேர்ந்தவர் லீலாவதி (18).  கல்லூரியில் படிக்கும்போது இருவரும் காதலித்து வந்தனர்.  இதைத் தொடர்ந்து,  அண்மையில் கோயில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லீலாவதியின் பெற்றோர்  தொட்டப்பள்ளாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன்பேரில்,  விஜய் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை லீலாவதியை விஜய் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.  இதற்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, வீட்டிற்கு நுழைய அனுமதி மறுத்துள்ளார். இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் லீலாவதியுடன் வெளியே சென்ற விஜய், வீராப்புரா அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர், அங்கு வந்த ரயில் முன் இருவரும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
இதுகுறித்து தொட்டப்பள்ளாபூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com