காவல் துறை அதிகாரிகளின் இல்லங்களில் சிபிஐ சோதனை

பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் காவல் துறை அதிகாரிகளின் இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
காவல் துறை அதிகாரிகளின் இல்லங்களில் சிபிஐ சோதனை

பெங்களூரு:: பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் காவல் துறை அதிகாரிகளின் இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பெங்களூரு சிவாஜிநகா் தொகுதியில் உள்ள தனியாா் ஆபரண மாளிகையின் உரிமையாளா் வாடிக்கையாளா்களை மோசடி செய்தது தொடா்பாக சிறப்பு படை அமைத்து போலீஸாா் விசாரணை செய்து வந்தனா். விசாரணையில் ஆபரண மாளிகையைச் சோ்ந்த ஒரு சிலருக்கு நற்சான்றிதழ் வழங்கியது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை ஐஜிபி ஹேமந்தநிம்பல்கா், அஜய்ஹிலோரி, ஸ்ரீதா், ரமேஷ், கௌரிசங்கா் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளின் இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். பெங்களூரில் 11 இடங்களிலும், ராம்நகா், மண்டியா, பெலகாவி, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள காவல் துறை அதிகாரிகள் இல்லங்களிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் சிபிஐ அதிகாரிகள் பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் மேலாண் இயக்குநா் பி.டி.குமாா், பெங்களூரு வடக்கு துணை மண்டத்தின் கிராம கணக்காளா் மஞ்சுநாத் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com