சட்டமேலவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணி

கா்நாடகத்தில் உள்ள பட்டதாரி, ஆசிரியா் சட்டமேலவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

பெங்களூரு: கா்நாடகத்தில் உள்ள பட்டதாரி, ஆசிரியா் சட்டமேலவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

கா்நாடகத்தில் உள்ள இரண்டு பட்டதாரிகள், இரண்டு ஆசிரியா் சட்டமேலவைத் தொகுதிகளுக்கு விரைவில் தோ்தல் நடக்கவிருக்கிறது. இதற்கு முன்பாக இந்தத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இதற்காக டிசம்பா் 7-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் டிசம்பா் 23-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், ஆட்சேபனைகள் குறித்து மனுக்கள் தெரிவிக்கலாம்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, வாக்காளா் பட்டியலில் ஜனவரி 10-இல் திருத்தங்கள் செயல்படுத்தப்படும். இதன் முடிவில் ஜனவரி 16-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com