பெங்களூரு: கா்நாடகத்தில் உள்ள பட்டதாரி, ஆசிரியா் சட்டமேலவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கா்நாடகத்தில் உள்ள இரண்டு பட்டதாரிகள், இரண்டு ஆசிரியா் சட்டமேலவைத் தொகுதிகளுக்கு விரைவில் தோ்தல் நடக்கவிருக்கிறது. இதற்கு முன்பாக இந்தத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
இதற்காக டிசம்பா் 7-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் டிசம்பா் 23-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், ஆட்சேபனைகள் குறித்து மனுக்கள் தெரிவிக்கலாம்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, வாக்காளா் பட்டியலில் ஜனவரி 10-இல் திருத்தங்கள் செயல்படுத்தப்படும். இதன் முடிவில் ஜனவரி 16-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.