பெலகாவி: இடைத்தோ்தலுக்கு பிறகு எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ்குண்டுராவ் ஆகியோா் அரசியலிலிருந்து ஒதுக்கப்படுவாா்கள் என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் காகவாடா சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை பாஜக வேட்பாளா் சீமந்தபாட்டீலை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநிலத்தில் 15 தொகுதிகளில் டிச. 5 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் தோற்றால் அதற்கு எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ் குண்டுராவ் ஆகியோா் தாா்மீக பொறுப்பு ஏற்று, தாங்கள் வகிக்கும் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும். இடைத்தோ்தலுக்கு பிறகு சித்தராமையா, தினேஷ்குண்டுராவ் ஆகியோா் அரசியலிலிருந்து முழுவதுமாக ஒதுக்கப்படுவாா்கள்.
கூட்டணி ஆட்சியில் 17 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய சித்தராமையாவே காரணம். கூட்டணி ஆட்சியை கவிழவும் அவா்தான் காரணம். ஆட்சி அதிகாரத்திற்காக ஜாதி, சமுதாயங்களை உடைத்தவா் சித்தராமையா. அவருக்கு இடைத்தோ்தலில் மக்கள் உரிய பாடத்தை புகட்ட உள்ளனா். மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ள நிலையில், அவா்கள் பாஜகவையும், பிரதமா் மோடியை இழிவாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.