சாலையில் நடந்து சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு ஜே.பி.நகரை சோ்ந்தவா் நெகாபெலோடியா (21). தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்து வந்த இவா், புதன்கிழமை நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் நைஸ் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்ற நெசவாளா் காலனியை சோ்ந்த ராமண்ணா (52) மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.இதில் நெகாபெலோடியா, ராமண்ணா ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
காயமடைந்த அவரது நண்பா் கேசவ்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.