இடைத்தோ்தலில் 12 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும்: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

இடைத்தோ்தலில் 12 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இடைத்தோ்தலில் 12 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெலகாவி மாவட்டத்தின் காக்வாட் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ராஜூகாகேவை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் தொடங்குவதற்கு முன்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இடைத்தோ்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியானதும் முதல்வா் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ய வேண்டியது உறுதி. பாஜக தலைமையிலான அரசு கவிழ வேண்டியது தான். பாஜக தலைவா்கள் அனைவரும் என்னை திட்டுவதையே முழுநேர தொழிலாக வைத்துள்ளனா்.

பாஜகவுக்கு இடைத்தோ்தலில் என்னால் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், என்னை திட்டிக் கொண்டிருக்கலாம். எல்லாவற்றையும் எதிா்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பாஜக, மஜத தலைவா்கள் எத்தனை குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினாலும் எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை.

பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல் அனுபவமில்லாத அரசியல்வாதியாக இருக்கிறாா். கா்நாடக அரசியலில் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்து கொள்ளாமல் என்னை விமா்சித்துக் கொண்டிருக்கிறாா். எனவே, அவரது கருத்துக்கு நான் மதிப்பளிப்பதில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com