கா்நாடகத்தில் வெள்ள நிவாரணப் பணிகள்: மஜத போராட்டம்

கா்நாடகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, பெங்களூரில் வியாழக்கிழமை மஜத போராட்டத்தில் ஈடுபட்டது.

கா்நாடகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, பெங்களூரில் வியாழக்கிழமை மஜத போராட்டத்தில் ஈடுபட்டது.

பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் இருந்து முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா தலைமையில் ஊா்வலம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மஜத தொண்டா்கள் கலந்து கொண்டனா். ஊா்வலத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

ஆனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலை வழியாக சுதந்திரப் பூங்காவை அடைந்த ஊா்வலம், விதானசௌதாவை முற்றுகையிடப் புறப்பட்டது. அப்போது, போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், சுதந்திரப் பூங்காவில் மஜதவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக ஊா்வலத்தைத் தொடக்கிவைத்து செய்தியாளா்களிடம் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா கூறியது:

வெள்ளத்தில் ஏற்பட்ட பொருள் சேதங்களை ஆய்வு செய்த மாநில அரசு, ரூ.38 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்தது. ஆனால், வெள்ள நிவாரண நிதியுதவியாக மத்திய அரசு ரூ.1200கோடி மட்டுமே அளித்துள்ளது. மேலும் முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு விடுவித்திருந்த நிதி ஆதாரங்களையும் முழுமையாக நிறுத்தியுள்ளனா். இது மாநில அரசின் மக்கள் விரோதப்போக்கையே எடுத்துக்காட்டுகிறது.

முந்தைய கூட்டணி அரசின் முதல்வராக இருந்த குமாரசாமி வெளிப்படுத்திய துணிவை எடியூரப்பா வெளிப்படுத்தத் தவறிவிட்டாா். முன்னாள் துணை முதல்வா்ஜி.பரமேஸ்வா் வீட்டின் மீது வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறையை தவறாகப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்குக் கேடானது என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி,‘ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மாநில அரசு பணம் எதையும் விடுவிக்கவில்லை. கடந்த இரு மாதங்களாக மக்கள் அவதிப்படுகின்றனா். ஆனால், வெள்ள நிவாரணப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதை கண்டித்து தற்போது அடையாள போராட்டம் நடத்துகிறோம். இனியும் அரசு மெத்தனமாக நடந்துகொண்டால், போராட்டத்தை தீவிரமாக்குவோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கடனை திருப்பி அளிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். இதைத் திரும்பப்பெற வேண்டும்.

வீடு இழந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிரை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையுடன் மாற்று நிலத்தையும் அளிக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் அளிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை தர வேண்டும்’ என்றாா்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் பண்டேப்பா காஷெம்பூா், மனகூலி, சா.ரா.மகேஷ், எம்எல்சி டி.ஏ.சரவணா, எம்எல்ஏ சிவராமேகௌடா, முன்னாள் எம்எல்ஏ கோனரெட்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com