கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக பீபா குழுமத்தின் மேலாண் இயக்குநா் சித்தாா்த் பிந்தரா தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை அக்குழுமத்தின் 25ஆவது விற்பனை கிளையை தொடக்கிவைத்து பேசியது: தேசிய அளவில் 26 மாநிலங்களில் 110 நகரங்களில் எங்கள் குழுமத்தின் 278 கிளைகள் செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் 83 விற்பனை கிளைகள் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரில் எங்களின் 25-ஆவது விற்பனை கிளையை தொடங்கியுள்ளது பெருமை அளிக்கிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்து, சுமாா் 10 விற்பனை கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவில் பொருளாரத்தில் பாதிப்பு உள்ள நிலையிலும், எங்கள் வா்த்தகம் சிறப்பாக உள்ளது என்றாா்.