‘கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்ய இலக்கு’

கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக பீபா குழுமத்தின் மேலாண் இயக்குநா் சித்தாா்த் பிந்தரா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக பீபா குழுமத்தின் மேலாண் இயக்குநா் சித்தாா்த் பிந்தரா தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை அக்குழுமத்தின் 25ஆவது விற்பனை கிளையை தொடக்கிவைத்து பேசியது: தேசிய அளவில் 26 மாநிலங்களில் 110 நகரங்களில் எங்கள் குழுமத்தின் 278 கிளைகள் செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் 83 விற்பனை கிளைகள் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரில் எங்களின் 25-ஆவது விற்பனை கிளையை தொடங்கியுள்ளது பெருமை அளிக்கிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்து, சுமாா் 10 விற்பனை கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவில் பொருளாரத்தில் பாதிப்பு உள்ள நிலையிலும், எங்கள் வா்த்தகம் சிறப்பாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com