பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.8) ஐடிஐ தமிழ் மன்றத்தில் 192-ஆவது பாவாணர் பாட்டரங்கம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் பாவாணர் பாட்டரங்கப் பொறுப்பாளர் இராம.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு தூரவாணிநகரில் உள்ள ஐடிஐ தமிழ் மன்றத்தில் செப்.8-ஆம் தேதி 192-ஆவது பாவாணர் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கும் பாட்டரங்கத்திற்கு கண்ணதாசதாசன் தலைமை தாங்க, மன்றச்செயலாளர் கு.மாசிலாமணி வரவேற்று பேசுகிறார். பாட்டரங்கப் பொறுப்பாளர் இராம.இளங்கோவன் அறிமுக உரை ஆற்றுகிறார்.
"பெண் விடுதலைப் பேணுவோம்' என்ற தலைப்பிலான பாட்டரங்கில் பாவலர்கள் பலர் பங்கு கொண்டு கவிதை பாடுகின்றனர். இதைத் தொடர்ந்து, உடனடி கவிதைப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கவிதைகளுக்கு புத்தகப் பரிசு, ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். பிறந்த நாள் காணும் கவிஞர்கள் ப.மூர்த்தி, அமரன், பி.வி.ரத்தினம், சா.நடராஜன், வ.மலர்மன்னன், கே.ஜி.ராஜேந்திரபாபு, ஆ.லாரன்ஸ், மு.கருணாகரன், சுந்தர்ராஜன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்படும்.
நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.